விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
தமிழ்த் திரையுலகத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உச்சத்தில் இருந்த காலத்திலேயே தன்னுடைய பிரம்மாண்டமான படைப்புகளால் தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் டி.ராஜேந்தர்.
2007ல் வெளிவந்த 'வீராசாமி' படத்திற்குப் பிறகு அவ்வப்போது புதிய படம் ஒன்றை அவர் இயக்கப் போவதாக செய்திகள் வெளிவரும். ஆனால், அது ஆரம்பமானதா இல்லையா என்பது தெரியாமலேயே அந்த செய்திகள் அப்படியே அடங்கிப் போய்விடும். அவருடைய இளைய மகன் குறளரசன் நாயகனாக நடிக்க படம் இயக்கப் போகிறார் என்று கூட சொன்னார்கள்.
ஆனால், இன்று தன்னுடைய அடுத்த படமாக 'இன்றைய காதல்டா...' என்ற படத்தை இயக்கப் போவதாக டி. ராஜேந்தர் அறிவித்துள்ளார். அப்படி டிஆரை காதல் படம்தான் இயக்க வேண்டும் என அவருடைய மகன் சிம்பு சொன்ன ஆலோசனையை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். முதலில், 'இகே நகர் இடைத்தேர்தல்' என்ற அரசியல் படத்தைத்தான் இயக்க டிஆர் முடிவு செய்திருந்தாராம்.
பல காதல் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் உங்களுக்கென தனி அடையாளத்தை வைத்திருக்கிறீர்கள், அதனால், நீங்கள் காதல் படம்தான் இயக்க வேண்டும் என்று சிம்பு சொன்னாராம். அதே சமயம், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள படத்தின் பெயர் 'மாநாடு' என்று அறிவித்துள்ளார்கள். இதுதான் அரசியல் படம் போலத் தெரிகிறது.
ஒருவேளை தான் அரசியல் படத்தில் நடிக்கப் போவதால் அப்பவின் ரூட்டை மாற்றிவிட்டாரோ சிம்பு....?