14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த படம் சண்டக்கோழி. இதன் இரண்டாம் பாகம் விஷால், ராஜ்கிரண் கூட்டணியுடன் மீண்டும் உருவாகி உள்ளது. லிங்குசாமியே இயக்கி உள்ளார். கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்திருக்கிறார். வில்லி ரோலில் வரலட்சுமி நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் இறுதிகட்ட பணிகள் நடக்கிறது. இந்நிலையில், இந்த படத்தை அக்டோபர் 18-ந்தேதி வெளியிட இருப்பதாக விஷால் தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியான இரும்புத்திரை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே வெற்றி பெற்றதால், இந்த படத்தை தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கில் பாண்டம் கோடி-2 என்ற பெயரில் வெளியிடுகிறார் விஷால்.