ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி சிறை சென்ற மலையாள முன்னணி நடிகர் திலீப், மலையாள நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார். தற்போது மோகன்லால் தலைமையில் நடிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்துள்ள நிலையில் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்க பொதுக்குழு ஒப்புதல் அளித்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக மலையாள சினிமா பெண்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த முடிவை எதிர்த்து 10க்கும் மேற்பட்ட முன்னணி நடிகைகள் சங்கத்திலிருந்து விலகினார்கள்.
இந்த நிலையில் மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
'அம்மா' என்கிற அமைப்பு துவக்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் பொதுக்குழு கூட்டம் நடந்தபிறகு ஊடகங்களை சந்திக்காதது தவறு தான், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். திலீப் கைது செய்யப்பட்டார் என்கிற தகவல் கிடைத்ததும், அப்போது இருந்த நிர்வாகிகளை வைத்து நிர்வாக குழு கூட்டம் நடத்தப்பட்டது. ராஜினாமா செய்ய வைக்க வேண்டும், சஸ்பென்ட் செய்ய வேண்டும் என்கிற கருத்துகள் முன்வைக்கப்பட்டன. நடிகர் சங்கம் இரண்டாக பிளவுப்படும் விதத்திலான ஒரு நிலைமை ஏற்பட்டது.
தயாரிப்பாளர் சங்கத்திலிருந்தும், இயக்குனர் சங்கத்திலிருந்தும் திலீப் நீக்கப்பட்டார் என்கிற தகவல் கிடைத்ததும் ஒரு முடிவுக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் நடந்த அடுத்த பொதுக்குழு கூட்டத்தில் இவ்விவரங்கள் விளக்கப்பட்டன. பல்வேறு வகையான விவாதங்கள் எழுந்தன. யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஒரு மாறுபட்ட சூழ்நிலையில் அமைப்பிலிருந்து திலீப் நீக்கப்பட்டார்.
சங்க விதிகளின்படி அவ்வாறு செய்யக்கூடாது என்பதால் மீண்டும் கடந்த பொதுக்குழுவில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. அவரும் நிரபராதியாகும் வரையில் சேர மாட்டேன் என்று தெரிவித்ததால் அவரை இணைக்க வேண்டாம் என்பதே சங்கத்தின் தீர்மானம். அவர் குற்றவாளி அல்ல எனத் தெரியவந்தால் அவரை இணைத்துக்கொள்ளத் தயார். வழக்கு முடிவுக்கு வந்தபிறகே திரும்ப இணைத்துக்கொள்வது சாத்தியம். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அம்மாவின் நிலைபாடு என்றார் மோகன்லால்.