ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றியை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். குறிப்பாக ஒவ்வொருவர் மனதிலும் படத்தின் கதாபாத்திரங்களை இப்போதும் கூட சுமந்து கொண்டிருப்பார்கள் என்பதும் மறுக்கமுடியாத. பாகுபலி-2 வெற்றியை தொடர்ந்து அதன் மூன்றாம் பாகம் உருவாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
அப்படி மூன்றாம் பாகம் உருவாக இருப்பது உண்மை தான். ஆனால் அதுவே வேறு விதமாக அதாவது பாகுபலி படத்தின் முன் கதையாக சிவகாமி என்கிற பெயரில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 3ஆம் பாகத்தில் அனுஷ்காவுக்கும் பிரபாஸுக்கும் வேலை இருக்காது. காரணம் இது தொடர்கதையாக அல்லாமல், முன்கதையாக அதாவது ப்ரீக்வல் ஆக உருவாக இருக்கிறதாம்.
குறிப்பாக ராஜமாதா சிவகாமி தேவியை முன் நிறுத்தியே இந்த பார்ட்-3 இருக்கும் என சொல்லப்படுகிறது. பாகுபலி படம் வெளியான பின்பு அதில் உள்ள சிவகாமியின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஆனந்த், நீலகாந்த், என்பவர் எழுதிய தி ரைட்ஸ் ஆப் சிவகாமி என்கிற புத்தகத்தை தழுவி இந்த சிவகாமி எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தை பிரபல ஆன்லைன் வீடியோ சேனலான நெட்பிலிக்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக இந்த சிவகாமி மூன்று எபிசோடுகளாக தயாரிக்க இருப்பதாகவும், அதில் ஒவ்வொரு எபிசோடும் இரண்டு மில்லியன் டாலரில் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியும், இயக்குனர் தேவா கட்டாவும் இணைந்து இந்த படத்தை இயக்குவார்கள் என்றும் தெரிகிறது. அதேசமயம் ராஜமாதா சிவகாமியாக எந்த நடிகை நடிக்க உள்ளார் என்பதாய் சஸ்பென்ஸிலேயே வைத்திருக்கிறார்கள்.