மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? |
'தீராத விளையாட்டு பிள்ளை', 'சமர்', 'நான் சிகப்பு மனிதன்' ஆகிய படங்களை இயக்கிய திரு இயக்கத்தில் கார்த்திக்கும், அவரது மகன் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடித்துள்ள மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் ரெஜினா, கவர்ச்சியாக நடித்திருக்கிறார்.
ஆனாலும், வரலட்சுமி சரத்குமார் நடித்த கதாபாத்திரம் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. தன்னுடைய அப்பா வயதுள்ள கார்த்திக்குடன் நட்பாகப்பழகும் இளம்பெண்ணாக நடித்திருந்தார்.
இந்தக் கேரக்டரில் நடிக்க பல நடிகைகள் தயங்கிய நிலையில் வரலட்சுமி நடிக்க முன்வந்தாராம். அதற்குக் காரணம் அவருடைய துணிச்சல் மட்டுமல்ல, விஷால் செய்த சிபாரிசும் தான்.
இயக்குநர் திருவும், விஷாலும் நெருங்கிய நண்பர்கள். அந்த அடிப்படையில் மிஸ்டர் சந்திரமௌலி கதையைக் கேட்ட விஷால், வரலட்சுமியை அந்தக் கேரக்டரில் நடிக்கும்படி சொன்னாராம். அதன்பிறகே அதில் நடிக்க சம்மதித்தாராம் வரலட்சுமி.
'மிஸ்டர் 'சந்திரமௌலி' படத்தை அடுத்து விஜய் உடன் 'சர்கார்', 'நீயா-2' உட்பட நான்கைந்து படங்களில் நடித்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார். அடுத்து ஜே.கே.என்பவர் இயக்கும் ஒரு படத்தில் கண் பார்வை இல்லாத பெண்ணாக நடிக்க இருக்கிறார் வரலட்சுமி!