சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை பலப்படுத்த நிர்வாகிகளை நியமனம் செய்ய போவதாக செய்தி வெளியிட்டிருந்தோம். அது தற்போது உண்மையாகி உள்ளது. தனுஷ், தனது மன்றத்திற்கு தலைவர், செயலாளரை நியமித்துள்ளார்.
இதுதொடர்பாக தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : "என் அன்பிற்குரிய ரசிகர் நற்பணிமன்ற தம்பிகளுக்கு வணக்கம். உங்களின் அன்பாலும், கடின உழைப்பினாலும் நமது நற்பணிமன்றம் சிறந்த கட்டுகோப்புடன் விளங்கி வருகிறது.
நமது மன்றத்தின் நலன் கருதி நீண்ட ஆலோசனைக்கு பிறகு, நற்பணி மன்றத்தின் அகில இந்திய தலைவராக சுப்ரமணியம் சிவாவையும், செயலாளராக ராஜாவையும் நியமிக்கிறேன். இவர்களுக்கு எப்போதும் போல் உங்களின் முழு ஒத்துழைப்பை தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்".
இவ்வாறு தனுஷ் கூறியுள்ளார்.
தலைவர் சுப்ரமணியம் சிவா வேறு யாருமல்ல, தனுஷின் திருடா திருடி, சீடன் மற்றும் அமீரின் யோகி படங்களை இயக்கியவர்.