ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஷால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த இரும்புதிரை படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், வசூலையும் குவித்தது. தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இரும்புத்திரை இரண்டாம் பாகம் தயாராகப்போவதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது நிலைமை மாறி இருக்கிறது. இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் தனது அடுத்து கூட்டணியை கார்த்தியுடன் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.
டிஜிட்டல் உலகில் நடக்கும் பகீர் பின்னணியை கொண்டு அவர் சொன்ன கதை கார்த்திக்கிற்கு பிடித்துவிடவே ஓகே சொல்லிவிட்டாராம். இது இரும்புத்திரை இரண்டாம் பாக கதை அல்ல வேறு பாணியில் பயணிக்கும் கதை என்கிறார்கள்.
படத்தில் இரண்டு ஹீரோயின்கள். அதில் ஒருவராக நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மற்றொரு முன்னணி நாயகி நடிக்கிறார். இது தொடர்பாக சாயிஷா மற்றும் கீர்த்தி சுரேசிடம் பேச்சு நடந்து வருகிறது. சாயிஷா ஏற்கெனவே கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியுடன் நடித்து விட்டதால் கீர்த்திக்கே அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் என்று தெரிகிறது.