ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனது இரண்டாவது இன்னிங்ஸில் வித்தியாசமான கதைகளையும், மாறுபட்ட கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அரவிந்த்சாமி. அவரது நடிப்பில் சில வாரங்களுக்கு முன் பாஸ்கர் ஒரு ராஸ்கர் படம் வெளியானது. படம் வெற்றியடையவில்லை என்றாலும் அவரது நடிப்பு பேசப்பட்டது.
'சதுரங்கவேட்டை-2', 'நரகாசூரன்', 'செக்க சிவந்த வானம்' என அரவிந்த்சாமி நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகவிருக்கின்றன. செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்து முடித்துள்ள அரவிந்த்சாமி அடுத்து நடிக்கும் படத்தை ராஜபாண்டி இயக்குகிறார்.
இவர் 'என்னமோ நடக்குது', 'அச்சமின்றி' படங்களை இயக்கியவர். ராஜபாண்டி சொன்ன கதையைக் கேட்டு பிடித்துபோன அரவிந்த்சாமி உடனடியாய் நடிக்க சம்மதித்ததோடு, அப்போதே கால்ஷீட் விவரங்களையும் தெரிவித்துவிட்டாராம்.
இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்க இருக்கிறது. அரவிந்த்சாமியுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.
இந்த தேர்வுகள் இறுதிகட்டத்தை எட்டியதும் படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.