ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மறைந்த நடிகர் முரளியின் வாரிசான அதர்வா, பாலா இயக்கிய 'பரதேசி' படம் மூலம் அனைவராலும் கவனிக்கப்படும் நடிகராக உயர்ந்தார். சொந்தப் பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் 'செம போத ஆகாதே' படத்தைத் தயாரித்து நடித்தார். இப்படத்தின் வெளியீட்டை மே மாதம் திட்டமிட்டு தேதியையும் அறிவித்தார்கள். அதன்பின் தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக் கொண்டதால் படத்தை ஜுன் மாதம் வெளியிட முடிவு செய்தார் அதர்வா.
அதன்படி, 'செம போத ஆகாதே' படம் கடந்த வாரம் ஜுன் 29ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பைனான்ஸ் பிரச்சினையால் அன்றைய தினம் தாமதமாகவே வெளியானது. மேலும், இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் எந்த ஒரு விஷயத்தையும் அதர்வா சரியாகச் செய்யவில்லை என்று வினியோகஸ்தர்கள் தரப்பிலும், தியேட்டர்காரர்கள் தரப்பிலும் சொல்லப்படுகிறது. படத்திற்கான பத்திரிகையாளர் காட்சியும் நடத்தப்படவில்லை. படம் வெளியானதே பல ரசிகர்களுக்குத் தெரியவில்லை, அதனால் தியேட்டர்களுக்குக் குறைவான கூட்டமே வருகிறதாம்.
இந்தக் காலத்தில் ஒரு படத்தை விளம்பரப்படுத்தினால் மட்டுமே மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியும். அப்படியிருக்க தன் முதல் சொந்தத் தயாரிப்பை அதர்வா ஏன் இப்படி சொதப்பினார் என்று திரையுலகத்திலும் பேசிக் கொள்கிறார்கள். படத்திற்கு இரு தரப்பான விமர்சனம் வந்தாலும், படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருந்தால் வசூல் பார்த்திருக்கலாம் என்கிறார்கள். அதர்வா நடித்து அடுத்து வெளிவர உள்ள 'இமைக்கா நொடிகள்' படம்தான் அவரைக் காப்பாற்ற வேண்டும்.