ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. சுமார் 1500 பேர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். ஒரு படம் தயாரிப்பதென்றால் அதன் தலைப்பை பதிவு செய்ய வேண்டும். தலைப்பை பதிவு செய்ய கில்டில் குறைந்த கட்டணம் என்பதால் இந்த சங்கத்தில் பதிவு செய்வார்கள். இதில் பல ஊழல் புகார்கள் உள்ளன.
இதன் தலைவராக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சண்டை இயக்குனர் ஜாக்குவார் தங்கம் பதவிக்கு வந்தார். அவர் மீது பல குற்றச்சாட்டுகள் மற்ற நிர்வாகிகளால் சொல்லப்பட்டது. தேர்தல் நடக்காமல் இருந்தது. பின்னர் வழக்கு தொடரப்பட்டு கடந்த மாதம் தேர்தல் நடந்தது.
தலைவராக ஜாக்குவார் தங்கம் மீண்டும் வெற்றி பெற்றார். ஆனால் மற்ற பதவிகளுக்கு அவரது எதிர் அணியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர். இதனால் மீண்டும் சங்க நிர்வாகிகள் இடையே மோதல் வெடித்துள்ளது. ஜாக்குவார் தங்கம் தங்களை அடியாட்களை வைத்து மிரட்டுவதாக துணை தலைவர் ரத்தினம் நேற்று போலீசில் புகார் செய்தார். அவர் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த மாதம் 10ந் தேதி நடந்த தேர்தலில் ஜாக்குவார் தங்கம் வெற்றி பெற்றார். அதன் பிறகு நடந்த செயற்குழுவில் உறுப்பினர்களிடம் பெறப்பட்ட கையெழுத்து பதிவேட்டை அவரே வைத்துக் கொண்டார். சங்கத்தில் இதற்கு முன் நடந்த ஊழல் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு மற்றும் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்காமல் தன்னிச்சையாக மற்றவர்களை மிரட்டும் தொணியில் நடந்து வருகிறார். சங்கத்திற்கு தொடர்பில்லாத 20 நபர்களை சங்கத்திற்கு அழைத்து வந்து நிர்வாகிகளை செயல்பட விடாமல் தடுத்து மிரட்டுகிறார். இதனால் ஊழியர்களும், நிர்வாகிகளும் அச்சத்தில் உள்ளனர். எனவே ஜாக்குவார் தங்கத்தின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.