ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'சஞ்சு' படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியானது. வெளியான மூன்றே நாளில் இந்தப் படம் 100 கோடி ரூபாயை வசூலித்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.
'பாகுபலி 2' படம்தான் இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூலைப் பெற்ற படம் என்ற சாதனையைப் படைத்திருந்தது. அந்தப் படம் முதல் நாளில் 46.5 கோடி வசூலைப் பெற்றது. அந்த சாதனையை 46.71 கோடி வசூலித்து 'சஞ்சு' படம் முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சஞ்சய் தத் எந்த தவறும் செய்யாதவர், சந்தர்ப்ப சூழ்நிலைதான் அவரை சிறைக்குச் செல்ல வைத்தது என்ற ரீதியில் எடுக்கப்பட்டுள்ள 'சஞ்சு' படம் விமர்சன ரீதியாகவும் பல்வேறு கருத்துக்களை எழ வைத்துள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் படத்தின் வசூல் சாதனை புரியும் அளவிற்கு அமைந்திருப்பது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. விரைவில் இந்தப் படம் 300 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிடும் என்கிறார்கள்.
'பாகுபலி 2' போன்ற பிரம்மாண்டமான படத்தின் வசூலை, குற்றம் செய்து தண்டனை அனுபவித்த ஒரு நடிகரின் வாழ்க்கை வரலாற்றுப் படம் மிஞ்சியிருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.