ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
முன்னணி இயக்குநராக இருந்த சுந்தர்.சி., தலைநகரம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்த இயக்குனர் சுந்தர்.சி. கடைசியாக நடித்து வெளிவந்த படம் 'முத்தின கத்தரிக்கா.
இந்த படத்துக்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகி படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். சுந்தர்.சி.இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் - 'கலகலப்பு-2'. இந்தப் படத்தை தொடர்ந்து ஆர்யா, ஜெயம்ரவி நடிக்கும் 'சங்கமித்ரா' என்ற பிரம்மாண்ட படத்தை இயக்க இருக்கிறார் என்று கடந்த ஒரு வருடமாக செய்திகள் வருகின்றன. இம்மாதம் சங்கமித்ரா படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட இருப்பதாக சொல்லப்பட்டது.
இந்த பட வேலைகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம், புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் சுந்தர்.சி. ஆனால் இந்த படத்தை சுந்தர்.சி.இயக்கவில்லை.
அஜித் நடித்த 'முகவரி', சிம்பு நடித்த 'தொட்டி ஜெயா', பரத் நடித்த 'நேபாளி', ஷாம் நடித்த '6' ஆகிய படங்களை இயக்கிய வி.இசட். துரை இயக்குகிறார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
சுந்தர்.சி.யும், வி.இசட்.துரையும் முதன் முதலாக இணையும் படம் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்குமா?