ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் |
இருதினங்களுக்கு முன்னர் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் மக்களின் கேள்விக்கு பதிலளிப்பதாக கூறியிருந்தார். வணக்கம்டுவிட்டர் தொடர்பான நிகழ்ச்சிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. பெயரளவுக்கு ஓரிரு கேள்விக்கு மட்டுமே அந்த நிகழ்ச்சியில் பதிலளித்தார்.
இதையடுத்து இன்று மீண்டும் மக்களின் கேள்விக்கு பதிலளிப்பதாக டுவிட்டரில் கமல் தெரிவித்தார். பிக்பாஸ் 2 ஷூட்டிங்கிற்கு இடையே நான் உங்களின் கேள்விக்கு பதிலளிக்கிறேன் என்று கூறியிருந்தார்.
அதன்படி நான்சி என்பவர், அடுத்த தலைமுறையிடம் ஜாதி, மதத்தை ஒழிக்க என்ன செய்ய போகிறீர்கள், பள்ளி, கல்லூரிகளில் அது கட்டாயம் இருக்குமா என கேட்டார்.
இதற்கு பதிலளித்த கமல், "எனது இரு மகள்களை பள்ளியில் சேர்த்தபோதே ஜாதி, மதத்தை குறிப்பிட மறுத்துவிட்டேன். இது அப்படியே அடுத்த தலைமுறைக்கும் போகும். ஜாதி, மதத்தை ஒழிக்க ஒரே வழி இது தான். இதை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும், கேரளா இதை அமல்படுத்திவிட்டது. நிச்சயம் அது பாராட்டப்பட வேண்டிய விஷயம் என கூறியுள்ளார்.