ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருநெல்வேலி கலெக்டர் அலுவலம் முன் இசக்கிமுத்து, சுப்புலட்சுமி தம்பதிகள் கந்து வட்டி கொடுமை காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவத்தை பின்னணியாக கொண்டு பொதுநலன் கருதி என்ற படம் உருவாகி உள்ளது.
இதில் கருணாகரன், சந்தோஷ், அருண் ஆதித் ஹீரோக்களாகவும், சுபிக்ஷா, அனுசித்தாரா, லிசா ஹீரோயின்களாகவும் நடித்திருக்கிறார்கள். ஹரிகணேஷ் இசை அமைத்துள்ளார், சுவாமிநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏவிஆர் புரொடக்ஷன் சார்பில் அன்புவேல்ராஜன் தயாரித்துள்ளார். சீயோன் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது:
பணக்கார வர்க்கத்துக்கும், ஏழை, நடுத்தர வர்க்கத்துக்கும் நடக்கும் பிரச்சினைகளே 'பொதுநலன் கருதி' திரைப்படம். சூழ்நிலை கைதிகளாய் மாறி தங்கள் வாழ்க்கையையே தொலைத்து நிற்கும் இளைஞர்களின் கதை இது. பணம் படைத்த பலரும் பணமற்றவர்களிடம் செலுத்தும் அதிகாரமே கந்துவட்டி. இந்த கந்துவட்டியால் பல குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்கின்றன. பல குடும்பங்கள் திக்கற்று திசை தெரியாமல் எப்படி வீழ்த்தப் படுகிறார்கள் என்பதை மையமாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பாளையங்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு இசக்கிமுத்து - சுப்புலட்சுமி மற்றும் குடும்பத்தினர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட நிஜ சம்பவம் என்னை மிகவும் பாதிப்படைய செய்தது. இப்படி சம்பவங்கள் தமிழ்நாட்டில் பல இடங்களில் இன்னும் நடந்து கொண்டு இருக்கின்றன. இதன் பின்னணியில் உள்ள நிழல் தாதாக்களின் கதையே 'பொதுநலன் கருதி' திரைப்படம். இந்த படம் வெளிவரும்போது எனக்கு பல அச்சுறுத்தல்கள் வரும். ஆனாலும் உண்மையை சொல்ல பயப்பட தேவையில்லை என்பதால் துணிச்சலுடன் இப்படத்தை எடுத்துள்ளேன் என்கிறார் படத்தின் இயக்குனர் சீயோன்.