ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
என்னை கொல்ல நினைப்பவர்கள் கோழைகள் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தின் பிரபல பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டார். அவர் நடிகர் பிரகாஷ்ராஜின் நெருங்கிய தோழி. இந்த கொலைக்கு பிறகு பிரகாஷ்ராஜ் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் சமீபத்தில் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணை மற்றும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரகசிய டைரி ஆகியவற்றில் அவர்கள், பிரகாஷ்ராஜையும் கொலை செய்ய திட்டமிட்டிருப்பது தெரியவந்தது. இது கர்நாடக சினிமா உலகையே அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இதுகுறித்து பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது:
பெங்களூருவில் எழுத்தாளர் கவுரி லங்கேஷை கொலை செய்தவர்கள், நடிகர் பிரகாஷ்ராஜையும் கொலை செய்ய திட்டமிட்டு உள்ளனர் என்று சிறப்பு புலனாய்வு பிரிவு கூறியுள்ளது. எனது குரலை ஒடுக்குவதற்கான மிரட்டல் தான் இது. இதுபோன்ற மிரட்டல்கள் வரும்போது எனது குரல் மேலும் வலிமையாக ஒலிக்கும். கோழைகளே இந்த வெறுப்பு அரசியலை விட்டு வெளியே வருவது குறித்து சிந்தியுங்கள்.
இவ்வாறு பிரகாஷ்ராஜ் எழுதியுள்ளார்.