ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காஞ்சிபுரம் மாவட்டம், வேதமங்களத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக 29 சென்ட் நிலம் உள்ளது. கடந்த, 2006-ம் ஆண்டு இந்த நிலத்தை முறைகேடாக விற்பனை செய்து கையாடல் செய்ததாக அப்போதைய தலைவர் சரத்குமார் மற்றும் பொதுச்செயலாளர் ராதாரவி உள்ளிட்ட நால்வது மீது தற்போதைய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் புகார் அளித்தார்.
மேற்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் சென்னை ஐகோர்ட்டை நாடினார் விஷால். சரத்குமார், ராதாரவி மீது வழக்கு பதிவு செய்யும்படி கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட நான்கு பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.