ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான 'மாரி' படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. மாரி படத்தில் வில்லன் கதாபாத்திரமும், அதில் நடித்த நடிகரும் வலுவில்லாமல் போனது முதல் பாகத்தின் வெற்றியை பாதித்தது.
அதனால் இரண்டாம் பாகத்தை உருவாக்கும்போது முதலில் வில்லனை வலுவான கேரக்டராக உருவாக்கி விட்டே, அதற்கடுத்து தனுஷின் கதாபாத்திரத்தை வில்லனுக்கேற்ற மாதிரி வடிவமைத்துள்ளார் பாலாஜி மோகன்.
அதற்காகவே தமிழுக்கு புதியவராக மலையாள இளம் நடிகரான டொவினோ தாமஸ் என்பவரை இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடிக்க வைத்துள்ளார் பாலாஜி மோகன். இந்தப்படத்தில் வில்லன் என்றாலும் இரண்டுவித கெட்டப்பில் நடித்திருக்கிறாராம் டொவினோ தாமஸ். மாரி -2 படத்தில் தனது போர்ஷனை முடித்துவிட்டார் டொவினோ தாமஸ். படத்தை பொறுத்தவரை இன்னும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறதாம்.