ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் விஜய்க்கும், அவரது அப்பா இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் வெகு காலமாகவே அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் உண்டு. இதை தன்னுடைய படங்களில், டயலாக்குகள் மற்றும் காட்சி அமைப்புகள் மூலம் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் விஜய்.
ஒவ்வொரு பட சூட்டிங்கின் போதும், அங்கு பெரும்பாலும் எஸ்.ஏ.சந்திரசேகர் இருப்பார். தன்னுடைய மகனுக்கு, 'இப்படிப்பட்ட காட்சி அமைப்புகள் வேண்டும்; இப்படிப்பட்ட வசனங்கள் வேண்டும்' என்று சொல்லி, கேட்டுக் கேட்டு, அதை அவர் படத்திற்குள் நுழைப்பார்.
ஆனாலும், நேரடியாக அரசியலில் ஈடுபட காலம் விரைவில் வரும் என்று, காத்திருப்பவர், அதற்கான, விதையை இப்போதிலிருந்து மெல்ல மெல்ல படங்கள் மூலம் தூவி வருகிறார். அடுத்ததாக, தான் நடிக்கவிருக்கும் சர்கார் படத்திலும், அரசியல் சம்பந்தப்பட்ட காட்சி அமைப்புகளையும், வசனங்களையும் வைக்கச் சொல்லி இருக்கிறார், நடிகர் விஜய்.
இதற்கு, அரசியல் அடங்கிய வசனங்கள் தயாரிக்கப்பட்டு, சர்கார் படம் வேகமாக படமாக்கப்படும் என தெரிகிறது. ஆனாலும், கட்சி சாயல் எதுவும் இல்லாமல் படமெடுத்தால், எங்களுக்கு ஓ.கே.,தான் என, தயாரிப்பு தரப்பு கூறியுள்ளதால், விஜய் ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறார் என கூறப்படுகிறது.
சர்கார் படத்தில், ஒரு இடத்தில், 'நான் ஒரு தொகுதியிலதான் போட்டியிட்டு வெற்றி பெறுவேன்னு நினைச்சேன்; நீங்க, என்னை 234 தொகுதியிலயும் போட்டியிட வெச்சு, முதல்வராக்காம விட மாட்டீங்க போல' என, நடிகர் விஜய் வசனம் பேசுவது போல படமாக்கப்பட்டிருக்கிறது என, பட தயாரிப்பு குழு தரப்பில் கூறுகின்றனர்.