14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
கன்னடத்தில் வெளியான 'யூ - டர்ன்' படத்தின் மூலம் பாப்புலரானவர் தான் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். கடந்த ஏப்ரலில் வெளியான மணிரத்னத்தின் 'காற்று வெளியிடை' படத்தில் இரண்டாம் நாயகியாக நடித்திருந்தாலும், தமிழில் 'ரிச்சி', 'இவன் தந்திரன்', விக்ரம் வேதா என வரிசையாக படங்களை கொடுத்து ரசிகர்களிடம் பரிச்சயமானார்.
தற்போது நானி மற்றும் நாகார்ஜுனா ஆகியோருடன் இணைந்து தெலுங்கில் தனது முதலடியை எடுத்து வைக்க இருக்கிறார். அதேபோல சமீபத்தில் நடைபெற்ற பிலிம்பேர் விழாவில் கலந்துகொண்ட ஷ்ரத்தாவை, எப்போது மலையாள திரைப்படங்களில் நடிக்க போகிறீர்கள் என கேட்டனர்.. அதற்கு "நானும் ரொம்பவே ஆவலாக இருக்கிறேன்.. மலையாளத்தில் உள்ள இயக்குனர்கள் அனைவரையும் பார்த்து கேக்கிறேன்.. என்னை எப்போது மலையாளத்திற்கு அழைக்க போகிறீர்கள்" என எதிர் கேள்வி கேட்டு மலையாளத்தில் நதிக்கு தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.