மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப்பிறகு சினிமாத்துறையில் இருந்து விஜயகாந்த் அரசியலுக்கு வந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது ரஜினி, கமல் அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ளார்கள். இந்த நிலையில், விஜய்யும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஜூன் 22-ந்தேதி விஜய்யின் பிறந்த நாள் என்பதால், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து போஸ்டர்கள், கட்அவுட்களை அவரது ரசிகர்கள் தமிழகத்தின் பல ஊர்களிலும் வைத்திருந்தனர். அதில் சில போஸ்டர்களில் வருங்கால முதல்வர் விஜய் - என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜூடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, விஜய்க்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். அதனால் நாளைய முதல்வர் என்று போஸ்டர் வைத்துள்ளனர். அதோடு, தமிழ்நாட்டில் மக்கள் பலம் உள்ள யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர்களை ஏற்பது மக்கள் கையில் தான் உள்ளது என்றார்.