ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்புகள் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வருகிறது. இதற்கான அமைக்கப்பட்ட பிரமாண்ட வீட்டில் 60 கேமராக்கள் கொண்டு இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இந்த படப்பிடிப்பில் வெளி மாநிலம், மற்றும் வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்கள், தொழிலாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பெப்சி தொழிலாளர்கள் சுமார் 25 பேர் பெப்சி நிர்வாகி அங்கமுத்து சண்முகம் தலைமையில் பிக்பாஸ் வீட்டை முற்றுகையிட்டனர். வெளிமாநில தொழிலாளர்கள் இங்கு பணியாற்றக்கூடாது பெப்சி தொழிலாளர்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று அங்குள்ள நிர்வாகிகளிடம் தெரிவித்தனார். இதனால் நேற்று நடந்த படப்பிடிப்பு சிறிது நேரம் தடைபட்டது. பின்னர் பெப்சி தொழிலாளர்கள் நிகழ்ச்சி மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்து விட்டுச் சென்றனர்.
இதுகுறித்து பெப்சி நிர்வாகி அங்கமுத்து சண்முகம் கூறும்போது, "தமிழ்நாட்டில் நடக்கும் படப்பிடிப்பில் வெளிமாநில தொழிலாளர்களை அதிகம் பயன்படுத்துவது பெப்சி விதிகளுக்கு முரணானது. அதிக அளவில் பெப்சி தொழிலாளர்களைத்தான் பயன்படுத்த வேண்டும். கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். இதுகுறித்து கமல்ஹாசனிடம் தெரிவிப்போம். எங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் தற்போது பணிபுரிந்து வரும் பெப்சி தொழிலாளர்கள் அனைவரையும் திரும்ப பெறுவோம்" என்றார்.