கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் குதித்து விட்டார். மாவட்ட, மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுவிட்டார்கள். தேர்தல் ஆணையம்கூட கட்சியை அங்கீகரித்து விட்டது. கமல் கட்சியில் சினிமாவில் இருந்து தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் நடிகை ஸ்ரீப்ரியா, தயாரிப்பாளர் கமீலா நாசர், கவிஞர் சினேகன் ஆகியோர் தான்.
தமிழ் நாட்டில் ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி கொள்கை பாடல்கள் இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது, பொதுக்கூட்டங்களின் போது தொண்டர்களை உற்சாகப்படுத்த இந்த பாடல்கள் பயன்படுத்தப்படும். அந்த வரிசையில் கமலின் கட்சி தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் அவர் கட்சிக்கென தனி கொள்கை பாடல்களை எழுதியுள்ளார்
கவிஞர் சினேகன். இந்த பாடல்களுக்கு இசை அமைப்பாளர் தாஜ்நூர் இசை அமைத்துள்ளார். இதன் வெளியீட்டு விழா வருகிற 25ந் தேதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கிறது. பாடல்களை கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிடுகிறார். இதில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.