ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இயக்குனர் பாரதிராஜா தமிழ் பண்பாட்டு கலை இலக்கிய பேரவை என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்த அமைப்பின் சார்பில் நடந்த கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அங்கு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிராஜாவுக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உள்ளது. இந்த நிலையில் நேற்று திருவல்லிக்கேணி போலீசில் பாரதிராஜா மீது இந்து மக்கள் முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளர் நாராயணன் நேற்று புகார் அளித்தார். அவரின் புகர் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 12ம் தேதி கோவையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு காரணமாக திரைப்பட இயக்குநர் அமீர் மீது கோவை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் அமீருக்கு ஆதரவாக நிருபர்களை சந்தித்த திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தேசத்திற்கு விரோதமாகவும், தமிழக அரசை மிரட்டும் விதமாகவும், தமிழக அரசை எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி இருக்கிறார். எனவே பாரதிராஜா மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த திருவல்லிக்கேணி போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி திருவல்லிக்கேணி போலீசார், 2 பிரிவுகளின் கீழ் பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.