ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு நேற்று வெளியிடப்பட்டது. படத்தின் தலைப்பு சர்கார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கில், விஜய் சிகரெட் பிடிக்கும் படம் உள்ளது. இதற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, தான் கொடுத்த வாக்குறுதியை விஜய் மீறிவிட்டார் என்பதையும் பழைய சம்பவத்தை சுட்டிக்காட்டி அவமானம் என குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டுக்கான கூட்டமைப்பும், பசுமைத் தாயகம் அமைப்பும் இணைந்து நடத்திய 'தமிழ்நாட்டில் புகையிலை கட்டுப்பாடு' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, “ரஜினிகாந்த் புகை பிடிக்கும் காட்சியில் நடிப்பதை நிறுத்திவிட்டார். அதேபோல் விஜய்யும் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார் அன்புமணி ராமதாஸ்.
“அன்புமணி ராமதாஸின் கருத்தை நான் வரவேற்கிறேன். புகைப்பழக்கத்துக்கு எதிரான அவருடைய போராட்டம், ஆரோக்கியமான விஷயம்தான். அவருடைய வேண்டுகோளை ஏற்று, இனிமேல் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்.” என்று கூறினார் விஜய்.
ஆனால், தற்போது அந்த உறுதிமொழியை மீறி சர்கார் படத்தில், சிகரெட் பிடிப்பது போல் போஸ் கொடுத்துள்ளார் விஜய். இதேபோல், 2012-ம் ஆண்டு வெளியான 'துப்பாக்கி' படத்தின் போஸ்டரிலும் சுருட்டு பிடிப்பது போன்று போஸ் கொடுத்திருந்தார் விஜய்.
துப்பாக்கி, சர்கார் இரண்டு படங்களின் இயக்குநரும் ஏ.ஆர்.முருகதாஸ் தான்...!