ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பொதுவாக ஒரு படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது பூசனிக்காய் உடைத்து விட்டு சாமி கும்பிட்டு விட்டு கலைந்து செல்வார்கள். அஜித், விஜய் போன்றவர்கள் கடைசி நாளில் தங்கள் செலவில் படக்குழுவினருக்கு விருந்து வைப்பார்கள், புத்தாடைகள் கொடுப்பார்கள். இதையெல்லாம் தாண்டிச் சென்று விட்டார் சிவகார்த்திகேயன்.
அவரும், சமந்தாவும் நடிக்க பொன்ராம் இயக்கிய, சீமராஜா படத்தின் படப்பிடிப்புகள் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. படப்பிடிப்பு நடந்த இடத்திலேய பிரமாண்ட மேடை அமைத்து பேர்வெல் பார்ட்டி கொடுத்தார் சிவகார்த்திகேயன். லைட்மேன்கள், செட் அசிஸ்டண்டிலிருந்து தயாரிப்பாளர் வரை கூடியிருந்தனர். தங்கள் படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டனர். சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அனேகமாக இந்த நிகழ்ச்சி ஏதாவது சேனலில் ஒளிபரப்பாகலாம் என்று தெரிகிறது.