ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினியின் கபாலி படம் மூலம் பிரபலமான நடிகை ராதிகா ஆப்தே, தற்போது ஹிந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார். சினிமாவிற்கு வந்த புதிதில் பண தேவைக்காக மோசமான படங்களில் நடித்தேன் என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... சினிமா பின்புலம் உள்ளவர்களுக்கு எளிதாக வாய்ப்புகள் கிடைக்கின்றன. எந்த பின்புலமும் இல்லாதவர்கள் போராடுகிறார்கள். நான் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் வந்தேன். நிறைய சிரமங்களை சந்தித்தேன். ஆரம்பத்தில் எந்த மாதிரி படங்களில் நடிக்கணும் என்று கூட தெரியாது. அதனால் வர வாய்ப்புகளில் நடித்தேன். பணதேவைக்காக அப்போது மோசமான படங்களிலும் நடித்தேன். என்னால் அதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் இப்போது அப்படியல்ல, வர வாய்ப்புகளை எல்லாம் நடிக்க ஒப்புக் கொள்ளாமல் பிடித்த கதைகளில் மட்டுமே நடிக்கிறேன்.
இவ்வாறு ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.