பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
பிக்பாஸ் சீசன்-1 நிகழ்ச்சியில் கடைசி வரை தாக்குப் பிடித்தவர்களில் பாடலாசிரியர் சினேகனும் ஒருவர். அந்த நிகழ்ச்சியில் பெண்களை அவ்வப்போது கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்னதால் கொஞ்சம் விமர்சிக்கப்பட்டவர். ஆனால் வெளியில் வந்த பிறகு அதுபோன்று தான் வேண்டுமென்றே செய்ததாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆறுதல் அங்கு தேவைப்பட்டதால் மட்டுமே உண்மையான பாசத்தோடு வெளிப்படுத்தப்பட்டது என்று விளக்கம் கொடுத்தார்.
இந்நிலையில், இன்று முதல் பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மீண்டும் கமல்ஹாசனே இந்நிகழ்ச்சியை நடத்துகிறார். இதில் கலந்து கொள்பவர்கள் பற்றிய முழு விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. இந்த நேரத்தில், பிக்பாஸ்-2வில் கலந்து கொள்பவர்களுக்கு சினேகன் ஒரு அன்பான அட்வைஸ் கொடுத்துள்ளார்.
அதாவது, இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை அனைவரும் இயல்பாக இருக்க வேண்டும் என்பது தான். முதல் சீசனில் எங்களுக்கு அதுபற்றிய சரியான புரிதல் இல்லாமல் அவ்வப்போது செயற்கைத் தனங்களும் வெளிப்பட்டது. ஆனால் இந்த முறை அப்படி யாரும் இருக்க முயற்சிக்கு வேண்டாம். காரணம் நம்முடைய இயல்புத்தன்மை வெளிப்படும்போது நேயர்கள் விமர்சிப்பார்கள். அதனால் கவனமாக நடந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.