ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிக்பாஸ் சீசன்-1 நிகழ்ச்சியில் கடைசி வரை தாக்குப் பிடித்தவர்களில் பாடலாசிரியர் சினேகனும் ஒருவர். அந்த நிகழ்ச்சியில் பெண்களை அவ்வப்போது கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்னதால் கொஞ்சம் விமர்சிக்கப்பட்டவர். ஆனால் வெளியில் வந்த பிறகு அதுபோன்று தான் வேண்டுமென்றே செய்ததாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆறுதல் அங்கு தேவைப்பட்டதால் மட்டுமே உண்மையான பாசத்தோடு வெளிப்படுத்தப்பட்டது என்று விளக்கம் கொடுத்தார்.
இந்நிலையில், இன்று முதல் பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மீண்டும் கமல்ஹாசனே இந்நிகழ்ச்சியை நடத்துகிறார். இதில் கலந்து கொள்பவர்கள் பற்றிய முழு விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. இந்த நேரத்தில், பிக்பாஸ்-2வில் கலந்து கொள்பவர்களுக்கு சினேகன் ஒரு அன்பான அட்வைஸ் கொடுத்துள்ளார்.
அதாவது, இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை அனைவரும் இயல்பாக இருக்க வேண்டும் என்பது தான். முதல் சீசனில் எங்களுக்கு அதுபற்றிய சரியான புரிதல் இல்லாமல் அவ்வப்போது செயற்கைத் தனங்களும் வெளிப்பட்டது. ஆனால் இந்த முறை அப்படி யாரும் இருக்க முயற்சிக்கு வேண்டாம். காரணம் நம்முடைய இயல்புத்தன்மை வெளிப்படும்போது நேயர்கள் விமர்சிப்பார்கள். அதனால் கவனமாக நடந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.