சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள '2.0' படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில், சுமார் 400 கோடி பட்ஜெட்டில் 2015-ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
சுமார் 2 ஆண்டுகள் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று, 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. கடந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு இந்த வருடம் ஜனவரி 25-ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் மாதம் ரிலீஸ் என மாற்றப்பட்டது.
ஒத்திவைப்புக்கு காரணமாக, கிராபிக்ஸ் வேலைகள் முடியவில்லை என்று சொல்லப்பட்டது. இந்த வருட தீபாவளிக்காவது '2.0' ரிலீஸாகும் என ரஜினி ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில் இந்த வருட தீபாவளிக்கு 2.0 படம் ரிலீஸாகாது என்கின்றனர். அடுத்த வருட ஜனவரியில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளார்களாம்.
2.0 படத்தின் கிராபிக்ஸ் பணியை செய்து வரும் லண்டன் நிறுவனம் ஒரு வழக்கில் சிக்கியதால், அந்நிறுவனத்தை சீல் வைத்துவிட்டனராம். அதனால் தான் 2.0 கிராபிக்ஸ் பணிகள் முடியவில்லை என்ற தகவலும் படத்துறையில் உலவுகிறது.