ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினியின் காலா படத்தில் காமெடி கலந்த ஒரு கேரக்டரில் நடித்து ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றுள்ளார் இயக்குனர் சமுத்திரகனி. இந்த படத்தில் நடித்து வந்தபோது அவர் நடித்த இன்னொரு படம்தான் கோலிசோடா-2. இதுவரை புரட்சிகரமான, பாசிட்டீவான வேடங்களாக நடித்துள்ள அவர், இந்த படத்தில் முதன்முறையாக வாழ்க்கையில் தோல்விடைந்த ஒரு வேடத்தில் நடித்துள்ளார்.
இதுபற்றி சமுத்திரகனி கூறுகையில், எப்போதுமே பாசிட்டீவாக இருப்பது தான் எனக்கு பிடிக்கும். அந்தமாதிரி வேடங்களாகவே எனக்கு கிடைத்து வந்தன. ஆனால் முதன்முறையாக என்னை மாறுபட்ட ஒரு வேடத்தில் இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார் விஜய் மில்டன். வாழ்க்கையில் தோல்வியடைந்த ஒரு கேரக்டரில் பர்பாமென்ஸ் செய்திருக்கிறேன். எனக்கு இது ஒரு மாறுபட்ட அனுபவமாகவே இருந்தது.
கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்து வந்தது. ஆனால், அந்த கவுதம் மேனனே கோலிசோடா-2 படத்தில் என்னுடன் இணைந்து நடித்தது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அந்த வகையில் இந்த படத்தில் வித்தியாசமான வேடம் என்பதோடு, கவுதம் மேனனுடன் நடித்ததும் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் சமுத்திரகனி.