14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
இயக்குநர் சமுத்திரகனி சமீபகாலமாக இயக்கம், நடிப்பு என இரட்டை குதிரை சவாரி செய்து கொண்டிருக்கிறார். "வெள்ளை யானை, ஆண் தேவதை" என சில படங்களில் நாயகனாக நடிப்பவர், பல படங்களில் வித்தியாசமான கேரக்டர்களிலும் நடித்து வருகிறார்.
தனது முதல் மெகா ஹிட் படமான நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் சசிகுமாரை வைத்து தற்போது இயக்கி முடித்து விட்டவர், இறுதிகட்ட பணிகள் ஈடுபட்டுள்ளார். இந்தநிலையில், நாடோடிகள் படத்தின் மூன்றாம் பாகத்தையும் இயக்கப்போவதாக தனது இணையபக்கத்தில் தெரிவித்துள்ளார் சமுத்திரகனி.
சமீபகாலமாக, எந்திரன்-2, விஸ்வரூபம்-2, கலகலப்பு-2, தமிழ்ப்படம்-2 என பல படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகியுள்ள நிலையில், சூர்யாவின் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் வெளியானது. அதையடுத்து இப்போது காஞ்சனா-3 படத்தை இயக்கி வருகிறார் ராகவா லாரன்ஸ். அந்த வரிசையில், நாடோடிகள்-3 படமும் இடம்பெறுகிறது.