ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
விக்ரம் நடிப்பில் துருவநட்சத்திரம், தனுஷ் நடிப்பில் எனை நோக்கி பாயும் தோட்டா படங்களை இயக்கி வருகிறார் கவுதம் மேனன். அதோடு கோலிசோடா-2 உள்பட சில படங்களில் நடித்தும் வருகிறார். இந்த நிலையில், ஏற்கனவே அவர் திட்டமிட்டிருந்த மல்டி ஹீரோ படத்தை இந்த ஆண்டில் தொடங்க திட்டமிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழகளில் உருவாகும் இந்த படத்தில் மீண்டும் மாதவனை நடிக்க வைக்க திட்டமிட்டார். ஆனால் அவர் வேறு சில படங்களில் பிசியாக இருப்பதால் இந்த படத்தில் மீண்டும் சிம்புவை நடிக்க வைக்க பேசியுள்ளார். அந்த வகையில், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை அடுத்து மீண்டும் கவுதம் மேனனுடன் இணைகிறார் சிம்பு.
இந்த படத்தில் கன்னட நடிகர் புனித் ராஜ் குமார், மலையாள நடிகர் டொவினோ தாமஸ் ஆகியோரும் நடிக்க, பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரிடமும் பேசி வருகிறார் கவுதம் மேனன்.