ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினி நடித்த காலா படம் நாளை வெளிவருகிறது. ரஜினி அரசியலில் குதிக்க இருப்பதால் படத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து நெருக்குதல் கொடுக்கப்படுகிறது. காலா படம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திரவிய நாடாரின் கதை. அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது என்று படத்தை பார்க்காமலேயே பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள், வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில காலா படத்தை திரையிடும் தியேட்டர்கள் முன் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று நாடார் சங்கங்கள் அறிவித்துள்ளன. இது தொடர்பாக நாடார்கள் சங்க நிர்வாகிகள் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
மும்பைக்கு பிழைப்பு தேடிச்சென்ற தமிழர்கள் பல பிரச்னைகளை சந்தித்தபோது, அவர்களுக்கு பாதுகாப்பாக திகழ்ந்தவர் திரவிய நாடார். 'கூடுவாலா சேட்' என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவரது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படமே 'காலா'.
ஆனால் இப்படத்தில் திரவிய நாடார் புகழை இருட்டடிப்பு செய்து, கதை நாயகனை ஒரு தலித் சமூக தலைவராக மாற்றியிருக்கிறார்கள். இப்படம் திரைக்கு வந்தால் நிச்சயமாக தென் தமிழகத்தில் சாதிய பிரச்னைகள் நடக்கும். எனவே தான் 'காலா' படத்தை தடை செய்யக்கோரி வலியுறுத்துகிறோம். உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளோம்.
தமிழர்களை சமூக விரோதிகள் என்று பேசிய ரஜினிகாந்த் நடித்த 'காலா' படம் திரைக்கு வந்தால், திரையிடப்படும் அனைத்து தியேட்டர்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். 'காலா' படத்தை நாடார் சமுதாய தலைவர்களுக்கு திரையிட்டு காட்டினால் பிர்சினை தீர வாய்ப்பிருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.