ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் நடத்திய 100வது நாள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் மரணம் அடைந்தனர். அதன் பின் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க அரசியல் தலைவர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தூத்துக்குடி சென்றர்.
இதில் கமல்ஹாசன் சென்றது கூட சர்ச்சையைக் கிளப்பவில்லை. ஆனால், ரஜினிகாந்த் சென்றது சர்ச்சையைக் கிளப்பியது. தூத்துக்குடி விமான நிலையத்தில் கார் மீது நின்று ரசிகர்களுக்கு அவர் கை அசைத்தது, சென்னை வந்து பத்திரிகையாளர்களிடம் ஆவசேமாகப் பேசியது சர்ச்சையானது. அதன் பின் ஆவேசமாகப் பேசியதற்கு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்தார்.
இதனிடையே, நேற்று எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல், மீடியாக்களுக்கும் தெரியாமல் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை அந்த ஊரில் பைக்கில் சென்று நள்ளிரவில் விஜய் சந்தித்துள்ளார். அந்த நேரத்தில் மொபைல் போன்களில் சிலர் எடுத்த புகைப்படங்கள் மட்டுமே வெளியாகின. விஜய்யின் இந்த அமைதியான பரபரப்பில்லாத பயணம் இன்று காலை முதலே சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க விஜய் சென்ற விதம் அவரது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.