ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
விஷால், சமந்தா மற்றும் பலர் நடிக்க தமிழில் வெளிவந்து பெரிய வசூலைப் பெற்ற இரும்புத்திரை படம், தெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் டப்பிங் ஆகி கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது.
தெலுங்கில் நேரடியாக வெளியான ஆபீசர், ராஜுகாடு ஆகிய படங்களைக் காட்டிலும் முதல் நாளே அபிமன்யுடு படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்த்தாகத் தகவல்கள் வெளியாகின. அதன்படி படத்திற்கு முதல் நாளில் நல்ல வசூலும் கிடைத்துள்ளது. தமிழில் கிடைத்த முதல் நாள் வசூலை விட தெலுங்கில் முதல் நாள் வசூல் அதிகம் என்கிறார்கள்.
தமிழில் முதல் நாள் வசூலாக 3 கோடி இருந்ததாம். அதே சமயம் தெலுங்கில் 3.5 கோடி வந்துள்ளதாகச் சொல்கிறார்கள். நேற்றும், நேற்று முன்தினமும் விடுமுறை நாள் என்பதால் அங்கு இன்னும் அதிகமாக வசூல் இருந்திருக்கும். எனவே, இந்த மூன்று நாட்களிலேயே அபிமன்யுடு படம் வாங்கியவர்களுக்கு லாபத்தைத் தர ஆரம்பித்திருக்கும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷாலுக்கு தமிழிலும், தெலுங்கிலும் ஒரு நல்ல வெற்றிப் படமாக 'இரும்புத்திரை' படம் அமைந்துள்ளது.