சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன், ரெமோ படங்களில் நாயகியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷ். அந்த படங்களின் வெற்றி அவருக்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை அந்தஸ்தை ஏற்படுத்திக்கொடுத்தது. அதன்பிறகு தெலுங்கிலும் சென்று பிசியாகிவிட்ட கீர்த்தி சுரேஷ், மகாநதி படத்திற்கு பிறகு கவனிக்கப்படும் நடிகையாகி விட்டார்.
இந்த நிலையில், தற்போது தமிழில் விஜய்-62, விக்ரமின் சாமி-2, விஷாலின் சண்டக்கோழி-2, என சில படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் சீமராஜா படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித் துள்ளார். இப்படியொரு காட்சியில் நடிக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் சொன்னதும், எந்த மாதிரியான வேடம் என்றுகூட கேட்காமல் உடனே ஸ்பாட்டிற்கு சென்று நடித்துக்கொடுத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.