ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி, அதாகப்பட்டது மகா ஜனங்களே என்ற படத்தின் மூலம் ஹீரோவானார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. உமாபதிக்கு எதிர்பார்த்த மாதிரி அடுத்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனால் தானே சொந்தமாக ஒரு படம் தயாரித்து, அதனை தானே இயக்க முடிவு செய்த தம்பிராமய்யா, மணியார் குடும்பம் என்ற பெயரில் படம் தொடங்கினார்.
இதில் உமாபதி ஜோடியாக மிருதுளா நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, ராதாரவி, ஜெயபிரகாஷ், சிங்கமுத்து, சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இதன் பணிகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. படத்திற்கு இசை அமைக்க பலரை அணுகினார் தம்பி ராமய்யா. அவரது பட்ஜெட்டுக்குள் யாரும் வராததால் தானே இசை அமைக்க முடிவு செய்துவிட்டார். அதோடு பாடல்களையும் அவரே எழுதிவிட்டார். படம் பற்றி தம்பி ராமய்யா கூறியதாவது
இது, வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்தை பற்றிய கதை. ஒரு குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவத்தை கருவாக வைத்து திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. வேலை எதுவும் செய்யாமல் ஊர் சுற்றும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில், ஒரு பெண் குறுக்கிடுகிறாள். அவள் வந்த பின், அவனுடைய வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது? என்பதே கதை. என் மகன் உமாபதி நடித்துள்ள 2வது படத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்காக, 5 மாதங்களாக நான் நடிக்கவில்லை.
இதில், நானே இசை அமைத்திருக்கிறேன். என் இசையில், டி.இமான் ஒரு பாடலை பாடியிருக்கிறார். ''என் மனசுக்குள்ள நீ புகுந்து... என்று தொடங்கும் அந்த பாடலை ரூ.40 லட்சம் செலவில் அரங்கு அமைத்து படமாக்கியிருக்கிறோம். சென்னை, புதுக்கோட்டை, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது. தந்தை - மகன் இடையேயான பாசப் பிணைப்பை சொல்லும் படம், இது. இதில் நானும், உமாபதியும் தந்தை - மகனாகவே நடித்து இருக்கிறோம். என்றார்.