ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காவிரி விஷயத்தில் கர்நாடகாவிற்கு எதிராக ரஜினி பேசியதாக கூறி, அவரின் காலா படத்தை திரையிட தடை விதித்து இருக்கிறது கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை. இதற்கு நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் விஷால் கூறியிருப்பதாவது... "காவிரி விவகாரம் பற்றி ரஜினி பேசியது அவரின் கடமை மற்றும் அவரின் பேச்சுரிமை. இதற்காக காலா படத்திற்கு எப்படி தடை விதிக்க முடியும். இந்த விஷயத்தில் கர்நாடக பிலிம் சேம்பர் மற்றும் அதன் நிர்வாகிகள் நல்ல முடிவு எடுப்பார்கள் என நம்புகிறேன். ஏனென்றால் நாம் அனைவரும் இந்தியர்கள்" என தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே விஷால் அளித்த பேட்டியில், காலா படம் கர்நாடகாவில் திரையிடுவது தொடர்பாக திரைப்பட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் சங்கம் உதவும். இந்த விஷயத்தில் பிரதமர் தன் மவுனத்தை கலைக்க வேண்டும். உளவுத்துறையின் குறைபாடே துப்பாக்கி சூட்டிற்கு காரணம் என்றார்.