சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
கர்நாடகா மாநிலத்தில் சமீப காலமாக அரசியல் விமர்சகர் ஆகவும் மாறியிருப்பவர் பிரகாஷ்ராஜ். எந்தக் கட்சியைப் பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேட்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். தேர்தல் முடிந்ததும் கர்நாடகாவில் பாஜக முதல்வர் பதவியேற்றதும், பிரகாஷ்ராஜ் அவ்வளவுதான் என பலரும் அவருக்காக சோக கீதம் பாட ஆரம்பித்தார்கள். நல்லவேளையாக பாஜக ஆட்சியிலிருந்து சில நாட்களில் விலகியது. தற்போது மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அரசை அமைத்துள்ளன.
ஆனால், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் மட்டுமே பதவியேற்றுள்ளனர். அமைச்சர்கள் யார் யார், அவர்களது இலாக்காக்கள் என்ன என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அது தொடர்பாக காங்கிரஜ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை இடையே குழப்பம் நீடித்து வருகிறது. இது குறித்து கர்நாடகாவின் புதிய அரசியல் விமர்சகர் ஆன நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டலடித்துள்ளார்.
“கர்நாடகா, அன்புள்ள ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸ், ஒரு வாரம் ஆகிவிட்டது. உங்கள் அமைச்சரவை மற்றும் இலாக்காக்கள் பற்றி சீக்கிரம் முடிவு செய்யுங்கள். மக்களாகிய நாங்கள் அரசாங்கத்தைப் பார்க்க வேண்டும், ஆட்சி செய்ய ஆரம்பியுங்கள்,” எனக் கிண்டலடித்திருக்கிறார்.