ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆள் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஆனந்த கிருஷ்ணன், இயக்கிய படம் மெட்ரோ. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்தப் படம் பெண்களிடம் செயின் பறிக்கும் திருடர்கள் பற்றிய கதை. திருடர்கள் எப்படி திட்டம்போட்டு செயின் பறிக்கிறார்கள், செயின் திருடர்கள் எப்படி உருவாகிறார்கள் என்பது தத்ரூபமாக சொன்ன படம்.
படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கிறது. படத்தை பார்த்து எப்படி செயின் அறுக்கலாம் என்று இளைஞர்கள் கற்றுக் கொள்வார்கள் என்று தணிக்கை குழு அனுமதி மறுத்தது. பிறகு ரிவைசிங் கமிட்டி வரைக்கும் சென்று ஏ சான்றிதழுடன் படம் வெளியானது.
படத்தை சின்னத்திரை சேனல்கள் வாங்க ஆர்வம் காட்டியது. ஆனால் அதற்கு சேனல்களில் ஒளிபரப்புவதற்கென்று தனியாக சான்றிதழ் பெற வேண்டும். இதனால் 22 இடங்களை கட் செய்து வன்முறை காட்சிகள் சிலவற்றை கருப்பு வெள்ளைக்கு மாற்றி தணிக்கை குழுவிற்கு அனுப்பினார்கள். அப்படி இருந்தும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு சான்றிதழ் தர தணிக்கை குழு மறுத்து விட்டது. ஒளிபரப்பு மறுப்பை எதிர்த்து ரிவைசிங் கமிட்டிக்கு போக முடியாது என்பதால் நீதிமன்றத்தை நாடலாமா என்று தயாரிப்பு தரப்பு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.