ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பாலிவுட் நடிகர் சயீப் அலிகானின் 24 வயது மகள் சாரா அலிகானும் கதாநாயகியாக கோதாவில் குதித்துள்ளார். தற்போது அபிஷேக் கபூர் என்பவர் இயக்கிவரும் 'கேதார்நாத்' படம் மூலம் அறிமுகமாகி நடித்துவரும் சாரா, முதல் படத்திலேயே கால்ஷீட் குளறுபடி செய்து அதன் மூலம் சிக்கலுக்கு ஆளாகி இருக்கிறார்.
'கேதார்நாத்' படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில் ரோஹித் ஷெட்டி டைரக்சனில் 'சிம்பா' என்கிற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் சாரா அலி கான்.. அதேசமயம் கேதார்நாத் படத்திற்காக கொடுத்த தேதிகளை 'சிம்பா'வுக்கும் கொடுத்துள்ளாராம் சாரா.. இதனால் ஜூன் மாதம் கேதார்நாத் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.
இதை தொடர்ந்து 'கேதர்நாத்' பட இயக்குனர் ஹிதேஷ் ஜெயின், முதலில் சாரா 'கேதார்நாத்' படத்தை முடித்துக்கொடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளதோடு தவறினால் 5 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளாராம்.