ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பேரணி, வன்முறையாக மாறி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதற்கு நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நீதி கேட்டு மக்கள் அமைதியாகப் போராடிய பொழுதெல்லாம் அலட்சியப்படுத்தியது அரசுகள். அரசின் அலட்சியமே அனைத்து தவறுகளுக்கும் காரணம். இதில் குடிமக்கள் குற்றவாளிகள் இல்லை. அவர்கள் எப்பொழுதும் உயிர் இழக்கிறார்கள். முன்பு ஆலையினால் இப்போது அரசின் அணையினால்.. அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கமல், மக்கள் வாழும் பகுதியை மாசுப்படுத்தி கொண்டிருக்கிறது ஸ்டெர்லைட் ஆலை. ஆலைக்கு ஆதரவாக சட்டதிட்டங்களை ஏவுவது கண்டிக்கத்தக்கது. துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்பது தான் தமிழகத்தின் இன்றையே கேள்வி. இந்த கேள்விக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். மேலிடத்தின் உத்தரவு இல்லாமல் துப்பாக்கிச்சூடு நடந்திருக்காது.
தூத்துக்குடியில் நடந்த சோகத்தை தமிழகம் மறக்காது. போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், துப்பாக்கிச்சூடு வரை போனது ஏன். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதே இன்றைய நிலை.
போராட்டத்திற்கு மக்கள் நீதி மையம் துணை நிற்கும். பேச்சுவார்த்தையில் தீர்க்க வேண்டியதை போராட்டத்தில் தீர்க்க முடியும் என்பது விவேகம் அல்ல.
போராட்டம் என்ற பெயரில் மக்களை கொல்வது அர்த்தமில்லை.
இறந்தவர்கள் குடும்பத்தை காக்க வேண்டும். மக்கள் அமைதி காக்க வேண்டும் என அரசு சொன்னால் போதாது. அரசும் அமைதியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு கமல் கூறினார்