ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
அரவிந்த்சாமி, அமலாபால் நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் சமீபத்தில் வெளிவந்தது. இதனை ஹர்சினி மூவீஸ் சார்பில் முருகன் தயாரித்திருந்தார். தற்போது முருகன், சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தான் கந்துவட்டி கேட்டு மிரட்டப்படுவதாக புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
நான், பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் தயாரிப்பதற்காக பைனாஸ்சியர் ஒருவரிடம் 1 கோடியே 40 லட்சம் கடன் பெற்றிருந்தேன். இந்த கடனை வட்டியுடன் சேர்த்து மாதம் 5 லட்சத்து 60 ஆயிரம் வீதம் முழுமையாக செலுத்தி விட்டேன். ஆனால் நான் இன்னும் 3 கோடியே 16 லட்சம் தர வேண்டும் என்று என்னை அவர் மிரட்டி வருகிறார். படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை நானே விற்று பணத்தை எடுத்துக் கொள்வேன் என்றும் கூறி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து கந்துவட்டி கொடுமையில் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் முருகன் கூறியிருக்கிறார்.