ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற இளம்பெண், ராம்குமார் என்ற இளைஞரால் படுகொலை செய்யப்பட்டார். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை, ஸ்வாதி என்ற கொலை வழக்கு என்ற பெயரிலேயே படமாக தயாரித்தார்கள்.
விஜயகாந்த் நடித்த உளவுத்துறை படத்தை இயக்கிய எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கினார். விஜயகாந்தின் முன்னாள் உதவியாளர் சுப்பையா தயாரித்தார். இந்தப் படத்துக்கு ஸ்வாதியின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்தார். போலீசில் புகார் அளித்தார், வழக்கும் தொடர்ந்தார்.
இதைத் தொடர்ந்து தற்போது படத்தின் தலைப்பை நுங்கம்பாக்கம் என்று மாற்றி உள்ளனர். அதோடு ஸ்வாதி கொலை என்பதை மாற்றி சுமதி கொலை என்று கதையிலும் மாற்றம் செய்து, இது கற்பனை கதை என்ற முன் அறிவிப்போடு படம் வெளிவருகிறது. படத்துக்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
இதில் கலந்து கொண்டு விஷால் பேசியதாவது : ஒரு உண்மை சம்பத்தை படமாக எடுப்பதற்கு இங்கு பல தடைகள் இருக்கிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிற மாதிரி கருத்து சொன்னால் அது ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை. எனது இரும்புத்திரை படத்தில் டிஜிட்டல் இந்தியாவில் வரும் சிக்கல்களை சொன்னோம். அதற்கு பெரிய எதிர்ப்பு. தியேட்டர்களில் படக் காட்சிகளை நிறுத்தினார்கள், குறைத்தார்கள்.
இதேப்போல இந்த படத்திலும் ஒரு உண்மை சம்பவத்தை சொல்கிறார்கள். ஸ்வாதி கொலை வழக்கு தொடர்பாக பத்திரிகையில் படித்தது தான் நமக்குத் தெரியும். அதற்கு பின்னால் உள்ள உண்மைகள் தெரியாது. அதை ஒரு படைப்பாளி தான் சொல்ல முடியும். அதை சொன்னால் தடுக்கிறார்கள். படத்தின் பெயரை மாற்ற வேண்டிய சூழ்நிலை வந்ததை நினைத்து வருத்தமும், கோபமும் வருகிறது என்றார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது: நான் இயக்கிய படங்களில் 5 படத்துக்கு பெயரை மாற்ற சொன்னார்கள், காட்சியை நீக்கச் சொன்னார்கள். ஆனால் நான் மறுத்து உச்சநீதிமன்றம் வரை சென்று படத்தை வெளியிட்டேன். இதுபோல இந்தப் படத்திற்கும் செய்திருக்க வேண்டும். யாருக்கு பயந்து பெயரை மாற்றினீர்கள். அப்படி மாற்றுவதாக இருந்தால் சுமதி கொலை வழக்கு என்றாவது வைத்திருக்க வேண்டும் என்றார்.
விழாவில் படத்தின் ஹீரோ அஜ்மல், இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.