ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
எழுமின் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு கலந்து கொண்டனர். விழாவில் சிம்பு பேசியதாவது.... என் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப போவது கிடையாது. குழந்தைகளை பள்ளிக்கு கற்று கொள்ள தான் அனுப்புகிறோம். ஆனால் அங்கு யார் முதலில் வருவான் என பார்க்கிறார்கள். அனைவரும் கற்க வேண்டும் என நினைப்பதில்லை. பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளின் திறமையை புரிந்து நடக்க வேண்டும்.
நடிகர் சங்க தேர்தலின் போது விஷாலின் பேச்சில் எனக்கு முரண்பாடு இருந்தது. அதனால் அவர் மீது கோபப்பட்டு திட்டியிருக்கிறேன். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவன் நான். ஆனால் அதையெல்லாம் மனதில் கொள்ளாமல் நடிகர் சங்க கட்டட அடிக்கல் நாட்டு விழாவிற்கு என்னையும் அழைத்தார். அதற்காக நன்றி சொல்கிறேன்.
எனக்கு பிடித்தமாதிரி வாழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது. படப்பிடிப்பிற்கு நான் தாமதமாக வருவதாக குற்றம்சாட்டுகிறார்கள். இனி அப்படி வர மாட்டேன்.
பேனர் வைக்கும் தகராறில் ரசிகர் இறந்தது வருத்தம் அளித்தது. அவரை கொலை செய்ததால் அந்த 9 பேரின் வாழ்க்கையும் வீணாகிவிட்டது. இனி யாரும் எனக்கு கட்-அவுட் வைக்க வேண்டாம்.
இவ்வாறு சிம்பு பேசினார்.