பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் பிரம்மாண்டமான நிகழ்ச்சி என்று சொல்லுமளவிற்கு கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சி அமைந்தது. நடிகர் கமல்ஹாசன் அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதால் நிகழ்ச்சியைப் பலரும் கண்டு ரசித்தனர். அடுத்தவர் வீட்டில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம் அனைவருக்குமே உண்டு. அதுவே இந்த நிகழ்ச்சி அதிக வரவேற்பைப் பெற்றதற்குக் காரணமாகவும் அமைந்தது.
'பிக் பாஸ்' முதல் சீசனில் 15 பிரபலங்கள், ஒரே வீட்டில் 100 நாட்கள் தங்கப் போவதாக நிகழ்ச்சி ஆரம்பமானது. 30 கேமராக்கள் அவர்களைப் படம் பிடித்தன. ஆனால், நிகழ்ச்சி ஆரம்பமான நான்காவது நாளிலேயே நடிகர் ஸ்ரீ, தன்னால் வீட்டில் இருக்க முடியவில்லை என்று வெளியேறினார். அதே போல நடிகை ஓவியா 41வது நாளில் மற்றவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார்.
நிகழ்ச்சியில் 'வைல்ட் கார்டு' நுழைவு என நடிகைகள் பிந்து மாதவி, சுஜா வருணி, காஜல் பசுபதி, நடிகர் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் நுழைந்தார்கள். இறுதியில் ஆரவ் என்ற மாடல் பிக் பாஸ் முதல் சீசனின் முதல் வெற்றியாளர் ஆனார்.
கடந்த வருடம் ஜுன் 25ல் ஆரம்பமான நிகழ்ச்சி செப்டம்பர் 30 வரை நீடித்தது. இப்போது 'பிக் பாஸ் சீசன் 2'விற்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டன. ஜுன் மாதம் இந்த இரண்டாவது சீசன் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
இதற்காக கமல்ஹாசன் பங்கேற்ற புரோமோ நேற்று இரவு முதல் ஒளிபரப்ப ஆரம்பித்தது. யு டியூபில் மட்டும் 8 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்த இரண்டாவது சீசனிலும் 15 பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாகவும் அவர்கள் 60 கேமராக்கள் படம் பிடிக்க உள்ளதாகவும் புரோமோவில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஆனால், எத்தனை நாட்கள் தங்கப் போகிறார்கள் என்பதைக் குறிப்பிடவில்லை. முதல் சீசனில் 30 கேமராக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன, இந்த சீசனில் கூடுதலாக 30 கேமராக்கள்.
இந்த சீசன் 2 வில் சில மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிகிறது. பூந்தமல்லியில் உள்ள அதே தனியார் ஸ்டுடியோவில் புதுப் பொலிவுடன் பிக் பாஸ் வீட்டை நிர்மாணிக்கும் வேலைகள் நடந்து வருகிறதாம். முதல் சீசன் வீட்டை விட இரண்டாவது சீசன் வீடு மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளதாம்.
வீட்டில் மட்டும் மாற்றமில்லை, நிகழ்ச்சியிலும் நிறைய மாற்றங்கள் இடம் பெற இருக்கிறதாம். இந்த சீசனில் யார் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பது குறித்து இப்போதே சமூக வலைத்தளங்களில் ஒரு பட்டியல் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், விஜய் டிவி தரப்பில் அதை ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள். ஆனாலும், இந்த முறை பல பிரபலங்கள் கலந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது. போன சீசனில் கலந்து கொண்ட பலர் பிரபலம் ஆகிவிட்டார்கள் என்பதே அதற்குக் காரணம்.
ஜுன் 16 முதல் 'பிக் பாஸ் சீசன் 2' ஒளிபரப்பாக உள்ளது.