மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
ஏ.ஆர்.ரகுமான், ஷங்கர் கூட்டணியில் 2010ம் ஆண்டு வெளிவந்த 'எந்திரன்' படத்தில் தான் மதன் கார்க்கி 'இரும்பிலே ஒரு இருதயம்...' பாடலை எழுதி பாடலாசிரியராக அறிமுகமானார். பொதுவாக, தங்கள் படம் வெளிவந்த நாளைத்தான் அனைவரும் முதல் பதிவாக வைத்துக் கொண்டாடுவார்கள். ஆனால், மதன் கார்க்கி பாடல் எழுதிய நாளைத்தான் தன்னுடைய முதல் பதிவாகக் குறிப்பிடுகிறார்.
“பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், முன்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் அமர்ந்து 'எந்திரன்' படத்திற்காக 'இரும்பிலே...' பாடலை எழுதினேன். 250 படங்கள் 750 பாடல்கள், உங்கள் வாழ்த்தும், அன்பும் வழிகாட்டலும் இல்லாமல் இது சாத்தியமில்லை. உங்களுக்கு நன்றி சொல்லி என் பயணம் தொடர்கின்றன,” என்று தன்னுடைய 10 ஆண்டு திரையுலகப் பயணம் பற்றி மதன் கார்க்கி நன்றிக் கடிதம் எழுதியிருக்கிறார்.
தற்போதும் எண்ணற்ற பாடல்களை எழுதிக் கொண்டு முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவராக மதன் கார்க்கி இருக்கிறார்.