ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் பிரகாஷ்ராஜ் பாரதிய ஜனதா கட்சியையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.வுக்கு எதிராக பிரசாரம் செய்தார்.
ஆனால் தேர்தல் முடிவுகள் மாறின. பா.ஜ., பெரும்பான்மையை பெறாவிட்டாலும் அதிக தொகுதிகளில் வென்ற தனிபெரும் கட்சியாக உருவெடுத்து இருக்கிறது. இதனால், பா.ஜ.,வின் எடியூரப்பா முதல்வராக பதவியேற்று, பின்னர் தானாகவே ராஜினாமா செய்தார்.
இதுகுறித்து பிரகாஷ்ராஜ், டுவிட்டரில் கூறியிருப்பதாவது... “கர்நாடகம் காவிமயம் ஆகவில்லை. இனி வண்ணமயமான விஷயங்கள் தொடர இருக்கிறது. 'மேட்ச்' தொடங்கும் முன்பே ஆட்டம் முடிந்து விட்டது. 55 மணிநேரம் கூட இந்த ஆட்சியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து மக்கள் பக்கம் நிற்பேன்” என்று பா.ஜனதாவை கிண்டல் செய்து டுவிட்டரில் எழுதி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.