ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புதியவர் மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜூன், சமந்தா நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் இரும்புத்திரை. டிஜிட்டல் மோசடிகள் பற்றி தோலுரித்து காட்டியிருக்கும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடந்தது.
இதில் பேசிய விஷால், இரும்புத்திரை படம் வெளிவரக்கூடாது என பலர் பல வேலைகள் செய்தனர். கடந்த 10ம் தேதி இரவு என் வாழ்க்கையை மறக்கவே முடியாது. என் வாழ்க்கையை புரட்டிப்போட்ட நாள் என்று கூட சொல்லலாம். தயாரிப்பாளர் சங்க தலைவரான என் படத்தையே சுத்தலில் விட்டார்கள்.
நீங்க என்ன ஆட்டம் போட்டாலும் சரி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்றுமே நேர்மையாக இருக்கும். எல்லா தயாரிப்பாளர்களையும் ஜெயிக்க வைக்க வேண்டியது தான் எங்கள் வேலை என சொடக்கு போட்டு சவால் விட்டார். 10ம் தேதி இரவு, பணத்தோடு அருமை என்னவென்று எனக்கு புரிய வைத்தார்கள் என உணர்ச்சிகரமாக பேசினார்.