ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரகாஷ்ராஜின் தோழியும், பத்திரிகையாளரும் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிறகு பா.ஜ., மீதும், பிரதமர் மோடி மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார் பிரகாஷ் ராஜ். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.,விற்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆனால் எல்லாவற்றையும் மீறி பா.ஜ., பெரும்பான்மையை பெறவில்லை என்றாலும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுள்ளார்.
இதுகுறித்து பிரகாஷ் ராஜ், டுவிட்டரில் கூறியிருப்பதாவது, கர்நாடகாவில் அரசியல் சாசனம் மீதான என்கவுன்ட்டர் தொடங்கி விட்டது. யார் எங்கு தாவினார்கள், எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் போன்ற செய்திகள் எல்லாம் வர தொடங்கும். அரசியல் சாணக்கியங்களை கண்டு மகிழுங்கள்.
அரசியல்வாதிகளின் விளையாட்டின் நமது இறுதி தீர்ப்பு அரசியலுக்காக எப்படி மாற்றப்படுகிறது. நம் நம்பிக்கையை சீர்குலைப்பவர்கள் யார் என்பன போன்றவற்றை எல்லாம் இப்போது கூட நாம் உணரவில்லை என்றால் மீண்டும் தோற்றுபோவாம் என கடுமையாக விமர்சித்திருக்கிறார்.