ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் படங்களின் வெளியீட்டை முறைப்படுத்த ஒரு குழுவை நியமித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு வாரமும் பல படங்கள் வெளியாகி தேவையில்லாத போட்டி உருவாவதை குறைத்து வருகிறார்கள். இதற்கு தயாரிப்பாளர்களிடமும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இருந்தும் சிலர் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அதர்வா நடித்துள்ள 'செம போத ஆகாதே' படம் முதலில் மே 18ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது படத்தின் வெளியீட்டை மே 25ம் தேதிக்கு தள்ளி வைத்துவிட்டார்கள். ஆனால், அன்றைய தினம் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'செம' படம் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முதலில் இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாவது பற்றி கூட நாம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இது ரசிகர்களிடம் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும். இப்போது இரண்டு படங்களும் ஒரே தினத்தில் வெளிவந்தால் படம் பார்க்க வரும் ரசிகர்கள் நிச்சயம் குழம்பிப் போவார்கள். தயாரிப்பாளர் சங்கம் இப்படிப்பட்ட குழப்பங்களுக்கும் சேர்த்து ஒரு முடிவு கட்ட வேண்டும்.